நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எப்ஏ கிண்ணம் அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின்  அரையிறுதி ஆட்டத்திற்கு மென்செஸ்டர் சிட்டி அணியினர் முன்னேறி உள்ளனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் இரு வெற்றி கோல்களை அதன் முன்னணி ஆட்டக்காரரான பெர்னாண்டோ சில்வா அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் கோவன்ரி சிட்டி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset