செய்திகள் கலைகள்
என் வாழ்நாள் கனவு நனவாகியது: டிஎஸ்பி நெகிழ்ச்சி
சென்னை:
இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் (டிஎஸ்பி) தனது ஸ்டுடியோவிற்கு இசைஞானி இளையராஜா வருகை புரிந்தது தன் வாழ்நாள் கனவு நனவாகியதாகத் தெரிவித்துள்ளார்.
இசை என்றால் என்ன என்பதை அறியாத குழந்தை பருவத்திலிருந்தே இசைஞானி இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்த தாம் அவரைச் சந்தித்த தருணம் நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்
தாம் பரீட்சைக்கு படிக்கும் போது கூட அவரது இசையைக் கேட்டு வளர்ந்ததாகவும் அவர் கூறினார்.
அவருடைய இசையைக் கேட்டு வளர்ந்ததால் தாமும் அவரைப் போல் ஓர் இசையமைப்பாளராக உருவெடுக்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்தையும் உறுதியையும் தமக்குள் தாம் விதைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடைய இசை ஸ்டுடியோவில் இசைஞானியின் படத்தை டிஎஸ்பி வைத்துள்ளார்.
இளையராஜா சார் ஒரு நாள் நிச்சயம் தனது ஸ்டுடியோவிற்கு வருகை தந்து அவருடைய பெரிய படத்திற்கு அருகில் நின்று தானும் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதே தன்னுடைய வாழ்நாள் கனவென்று டிஎஸ்பி உருக்கமாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, தனது குரு - ஸ்ரீ மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் தனது இந்தக் கனவு நனவாகியது தன் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும் என்றார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 3:34 pm
எனது இசை நிகழ்ச்சி அனைவருக்குமானது: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்
May 5, 2024, 11:53 am
ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சிக்கு மலேசியாவைச் சேர்ந்த அருளினி தேர்வு
May 3, 2024, 2:10 pm
பையா திரைப்படத்தையடுத்து அயன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்கிறார் டிஎஸ்ஜி
May 3, 2024, 11:46 am
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
May 2, 2024, 5:16 am
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
April 30, 2024, 4:31 pm
மலேசிய ரசிகர்களை வசீகரிக்கப் போகும் ஏஆர் ரஹ்மானின் கண்கவர் இசை நிகழ்ச்சி
April 30, 2024, 11:38 am
இசை பெரிதா? மொழி பெரிதா? கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்
April 29, 2024, 7:52 pm
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி
April 25, 2024, 6:48 pm