செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, மதிமுகவிற்கு 1, தொகுதிகள் ஒதுக்கீடு: சிதம்பரம், விழுப்புரத்தில் தனிச் சின்னத்தில் போட்டி
சென்னை:
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் தொகுதிகள் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசிய நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. அதன்படி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இன்று திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதிமுகவை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு உடன்படிக்கை செய்தார். தொகுதிப் பங்கீட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் கையெழுத்திட்டனர்.
அதன்படி, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3 தொகுதிகள் கேட்ட நிலையில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2019 தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm