நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தென் கொரியாவுடன் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குறை மின்கடத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா விருப்பம்: ஜெய்சங்கர்

சியோல்:

தென் கொரியாவுடன் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குறை மின்கடத்தி (செமி கண்டக்டா்) மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் உத்தி சாா்ந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா விரும்புகிறது’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினார். 

தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு 4 நாள்அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், செவ்வாய்க்கிழமை தென்கொரியா வந்தாா். 

அந்நாட்டுப் பிரதமா் ஹன் டக்-சூவை ஜெய்சங்கா் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா். 

இந்நிலையில், தென்கொரியா தலைநகா் சியோலில் புதன்கிழமை நடந்த 10-ஆவது இந்திய-தென்கொரியா கூட்டு குழுக் கூட்டத்தில் தென்கொரிய வெளியறவு அமைச்சா் சூ டே-யுல்லுடன் ஜெய்சங்கா் பங்கேற்றாா். 

கூட்டத்தில் ஜெய்சங்கா் ஆற்றிய தொடக்க உரையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 2015-ஆம் ஆண்டு தென்கொரிய பயணத்தைத் தொடா்ந்து, இந்தியா-தென்கொரியா இடையே இருதரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளன. நமது இருதரப்பு பரிமாற்றங்கள், வா்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை நிலையான வளா்ச்சியைக் கண்டுள்ளன. 

வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மின் குறைகடத்தி, பசுமை ஹைட்ரஜன், மனித வள இயக்கம், அணுசக்தி ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலி பின்னடைவு போன்ற புதிய துறைகளிலும் நமது ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இந்தியா மிகவும் ஆா்வமாக உள்ளது. 

சா்வதேச அரங்கில் நமது இருநாட்டு கருத்துகளின் மதிப்பு வளா்ந்து வருகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நாம் மேலும் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு.  

கடந்த ஆண்டு, ஹிரோஷிமா மற்றும் தில்லியில் நமது இருநாட்டுத் தலைவா்கள் 2 முறை சந்தித்துள்ளனா். அவா்களின் கலந்துரையாடல்கள் நாம் முன்னோக்கி செல்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன என்றாா். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset