
செய்திகள் இந்தியா
ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியின் சுரங்க அறையில் ஹிந்து சிலைகளுக்கு பூஜை நடத்த தடையில்லை என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
பூஜை நடத்த அனுமதி அளித்து மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த மசூதியில் ஆய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை, 17ம் நூற்றாண்டில் ஒüரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட பிரம்மாண்ட ஹிந்து கோயில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவித்தது.
இதற்கு மசூதி தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த மசூதியின் நிலவறையில் உள்ள சிருங்கார் கௌரி உள்ளிட்ட ஹிந்து சிலைகளுக்கு பூஜை செய்ய அனுமதி அளித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மசூதி நிர்வாக குழு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால், மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் தலையிட உயர்நீதிமன்றத்துக்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 9:47 pm
ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்ட சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
October 20, 2025, 10:40 am
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm