செய்திகள் இந்தியா
வங்கி கொள்ளையர்களை மடக்கி பிடித்த பெண் காவலர்
ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூரில் வங்கி காசாளரை துப்பாக்கியால் சுட்டு பணத்தைத் திருடி சென்ற இரு கொள்ளையர்களை பெண் காவலர் மடக்கிப் பிடித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் முகமூடி அணிந்தபடி இரு கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். அப்போது, வங்கி காசாளரை சுட்டுவிட்டு கையில் கிடைத்த பணத்துடன் தப்பியோடினர்.
வங்கிக்கு வெளியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் துணிச்சலுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டு, அவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தார்.
இதற்கு பிறகு கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்தனர்.
கொள்ளையர்களில் ஒருவர் மட்டும் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தியதும், மற்றொரு நபர் பொம்மை துப்பாக்கியை கையில் வைத்து மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
