செய்திகள் இந்தியா
கோலாலம்பூர் உள்பட 14 நாடுகளில் நீட் தேர்வு மையங்கள்
புது டெல்லி:
மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு கோலாலம்பூர் உள்பட வெளிநாடுகளில் உள்ள 14 தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மே 5ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
எம்பிபிஎஸ், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற ஆயுஷ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 554 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, அபுதாபி, ஷார்ஜா; குவைத்தின் குவைத் நகரம்; தாய்லாந்தின் பாங்காக், இலங்கையின் கொழும்பு; கத்தாரின் தோஹா; நேபாளத்தின் காத்மாண்டு; மலேசியாவின் கோலாலம்பூர்; பஹ்ரைனின் மனாமா; ஓமனின் மஸ்கட்; சவூதி அரபியாவின் ரியாத்; சிங்கப்பூர் ஆகிய 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தில் இந்தியாவில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு மையங்களை மாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பம் பதிவு நிறைவடைந்தவுடன், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான காலஅவகாசம் வழங்கப்படும்.
அப்போது, தங்களுக்குரிய நாடுகளையும் தேர்வு மையங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என அதிகாரி தெரிவித்தார்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am