நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியான்மர் 3 படைத் தளபதிகளுக்கு மரண தண்டனை

யாங்கூன்:

மியான்மரில் பழங்குடியினப் படையினரிடம் சரணடைந்ததற்காக 3 படைப் பிரிவு தளபதிகளுக்கு அந்த நாட்டு ராணுவம் மரண தண்டனை விதித்துள்ளது.

சீன எல்லையையொட்டிய லாவ்காய் நகரை பழங்குடியினக் கூட்டுப் படையினரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பகுதி ராணுவம் கடந்த மாதம் சரணடைந்தது.  அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக, லாவ்காய் நகர படைப் பிரிவு தளபதி உள்ளிட்ட 3 தளபதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லாவ்காய் நகரம் பழங்குடியினப் படையிடம் வீழ்ந்தது மியான்மர் ராணுவத்துக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset