செய்திகள் மலேசியா
சிலாங்கூர் பெர்சத்து தலைவராக அஸ்மின் நெகிரியில் இருந்து அஹ்மத் பைசால் நீக்கம்
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் மாநில தலைவராக டத்தோஸ்ரீ அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில் நெகிரி செம்பிலான் தலைவர் பொறுப்பில் இருந்து டத்தோஸ்ரீ அஹ்மத் பைசால் நீக்கப்பட்டுள்ளார்.
பெர்சத்து கட்சியில் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு மாநிலங்களின் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநில தலைவராக டத்தோ அப்துல் ரஷித் பதவி வகித்து வந்தார்.
தற்போது அவருக்கு பதிலாக அஸ்மின் அலி புதிய மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவர் பதவியும் மாற்றத்தைக் கண்டுள்ளது.
இதற்கு முன் நெகிரி செம்பிலான் தலைவராக டத்தோஸ்ரீ அஹ்மத் பைசால் பதவி வகித்தார்.
தற்போது அவருக்கு பதிலாக லாபு சட்டமன்ற உறுப்பினர் முஹம்மத் ஹனிபா அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு மாநிலங்களை வழிநடத்தியதற்காக டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு மற்றும் டத்தோ அப்துல் ரஷித் ஆகியோரின் சேவைக்கு கட்சி நன்றி தெரிவித்துக்கொள்கிறது என்று ஹம்சா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm