செய்திகள் மலேசியா
போலியான ரிஃபோர்மாசி கொள்கையை அன்வார் கொண்டிருக்கிறார்: துன் டைய்ம் ஸைனுடின் சாடல்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் போலியான ரிஃபோர்மாசி கொள்கையைக் கொண்டிருக்கிறார். அன்வார் மேற்கொண்ட வாக்குறுதிகளும் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் முன்னாள் நிதியமைச்சருமான துன் டைய்ம் ஸைனுடின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடும் நாட்டின் நிர்வாகமும் கேள்விக்குறியாகியுள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகமான அதிகார துஷ்பிரயோகம் தான் நடப்பதாக துன் டைய்ம் சொன்னார்.
புதிய மலேசியாவுக்கான வழியை அடைவோம் என்று கூறினார்கள்; அதுதான் இதுவா என்று துன் டைய்ம் ஸைனுடின் வினா எழுப்பினார்.
முன்னதாக, சொத்து விபரங்களை முறையாக அறிவிக்காத துன் டைய்ம் ஸைனுடினுக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். இருப்பினும், அவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm