செய்திகள் மலேசியா
சம்பளம், அலவன்ஸ் எடுத்துக் கொள்ளாததால் ஓய்வூதியம் பற்றி கருத்தரைக்க விரும்பவில்லை: டத்தோ ரமணன்
சுங்கைபூலோ:
சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து சம்பளம், அலவன்ஸை என் சொந்தத்திற்கு பயன்படுத்தியது இல்லை.
அதனால் ஓய்வூதியம் பற்று கருத்துரைக்க விரும்பவில்லை என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.
அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே வேளை அரசியல் தலைவர்களும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஓய்வூதியத்தை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.
என் சம்பளம், அலவன்ஸுகள் அனைத்தும் சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வழிபாட்டு தளங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் இருந்து ஒரு ரிங்கிட்டை கூட எனது சொந்த செலவுக்காக பயன்படுத்தியது இல்லை.
அதனால் இந்த விவகாரம் குறித்து கருத்துரைக்க நான் விரும்பவில்லை என்று டத்தோ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm