செய்திகள் மலேசியா
அனைத்து இந்தியர்களும் மகாதீர் மீது புகார் செய்ய வேண்டும்
செந்தூல்;
மலேசியாவிற்கு இந்தியர்களும் சீனர்களும் விசுவாசமாக இல்லை என கூறி சர்ச்சையை உண்டாக்கிய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது அனைத்து இந்தியர்களும் போலீஸ் புகார் அளிக்க வேண்டுமென டத்தோஶ்ரீ டாக்டர் அழகேசு கேட்டுக் கொண்டார்.
மலேசிய மக்கள் மீட்சி சங்கத்தின் சார்பாக செந்துல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோதும் அச்சங்கத்தின் தலைவருமான அழகேசு இவ்வாறு கூறினார்.
அண்மையில் தமிழ்நாட்டில் செயல்படும் தந்தித் தொலைக்காட்சியின் இயங்கலை நேர்காணலில் பங்கேற்ற மகாதீர், மலாய்க்காரர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் இந்தியர்களூம் சீனர்களும் பின்பற்றவில்லை. இதனால் அவர்கள் மலேசியாவிற்கு விசுவாசமாக இருப்பதில்லை என கூறியிருந்தார்.
மகாதீரின் இந்த கருத்து மலேசியா உட்பட இதர நாடுகளில் வாழும் இந்தியர்களையும் வெகுவாகப் பாதித்தது. பலர் இதற்கு சமூக ஊடகத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் என அழகேசு சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரத்தை இந்தியர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மலேசியர்கள் என்ற சிந்தனையில் வாழும் நம்மிடையே பிரிவினையை உண்டாக்க மகாதீர் எடுத்த இந்த முன்னெடுப்பத்தை நாம் அனைவரும் ஓரணியாக திரண்டு தடுக்க வேண்டும்.
இந்நிலையில் மலேசியாவில் இருக்கும் அனைத்து இந்தியர்களும், உடனடியாக போலீஸ் புகார் செய்ய வேண்டுமென டத்தோஶ்ரீ டாக்டர் அழகேசு வலியுறுத்தினார்.
-தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm