செய்திகள் மலேசியா
முதல்கட்ட ரஹ்மா உதவி நிதி இன்று முதல் வழங்கப்படுகின்றது
கோலாலம்பூர்:
ரஹ்மா உதவி நிதி இன்று முதல் வழங்கப்படுகின்றது.
முதல்கட்ட ரஹ்மா உதவி நிதியை 8.2 மில்லியன் பேர் பெறவுள்ளனர்.
STR தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட பெறுநருக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல்,அந்நிதியை சிம்பானன் நேஷனல் வங்கியிலும் பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
2,500 வெள்ளி மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானப் பிரிவில் உள்ள பெறுநர்களுக்கு 500 வெள்ளி வழங்கப்படும்.
கடந்தாண்டு இவர்களுக்கு 300 வெள்ளி வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு 200 வெள்ளி அதிகரிக்கப்பட்டுள்ளது.
RM2,501 முதல் RM5,000 வரை வருமானம் ஈட்டும் திருமணமாகாதவர்களுக்கு 300 வெள்ளி வழங்கப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm