செய்திகள் மலேசியா
காணாமல் போன தொழிலதிபர் சடலமாக மீட்பு
பெட்டாலிங் ஜெயா:
இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போனதாகக் கூறப்பட்ட தொழிலதிபர் நேற்று கிளந்தான் பந்தாய் கூடா, பூலாவ் டோல்லாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
43 வயதான நோர்ஹிஷாம் இஸ்மாயிலின் உடலை மீட்க காவல்துறைக்கு உதவுவதற்காக இரவு 9.08 மணிக்கு கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து நான்கு உறுப்பினர்களும் ஒரு படகில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றதாக கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் சே மஸ்லான் முஹமத் கூறினார்.
உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களால் ஆடைகளை அடையாளம் காணப்பட்டதன் விளைவாக, ஜனவரி 15-ஆம் தேதி அன்று சுங்கை கிளந்தானில் காணாமல் போனவரின் சடலம் இதுவென உறுதி செய்யப்பட்டது.
நோர்ஹிஷாம் இஸ்மாயிலின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
நோர்ஹிஷாம் இஸ்மாயில் ஜனவரி 15-ஆம் தேதி சுல்தான் இஸ்மாயில் பெட்ரா பாலத்திலிருந்து டெண்டாங், பாசிர் மாஸிலுள்ள கிளந்தான் ஆற்றில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm