நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரான்ஸில் விவசாயிகள் போராட்டம்; போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பாரிஸ்: 

பிரான்ஸில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பாரிஸ் நகரத்தைச் சுற்றியுள்ள ருங்கிஸ் மார்கெட், ரொய்சி விமான நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால் டர்மனின் உத்தரவுக்கினங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரான்ஸ் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிகளவில் போலீஸ் படைகள் அணிவகுத்துள்ள காட்சிகளும் பிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. 

பிரான்ஸ் நாட்டில் போராட்டத்தின் எதிரொலியாக எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset