செய்திகள் மலேசியா
வாகனமோட்டியிடம் கையூட்டு பெற்ற போலிசார்: காவல்துறை விசாரிக்கும்
கோலாலம்பூர்:
வாகனமோட்டியிடம் போக்குவரத்துத் துறை போலீசார் கையூட்டு பெற்ற விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரிக்கும்.
இதனை புக்கிட் அமான் சாலை போக்குவரத்து குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் முஹம்மத் அஸ்மான் கூறினார்.
இரு அந்நிய நாட்டவரிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் கையூட்டு பெறும் வீடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
அபராதத்தை இங்கு செலுத்தினால் 100 ரிங்கிட், போலீஸ் நிலையத்தில் செலுத்தினால் 300 ரிங்கிட் என்று அவர் பேசிய வீடியோ பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து காவல் துறைக்கு புகார்கள் கிடைத்துள்ளன.
இப் புகார்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து விவரங்கள் தெரிந்தவர்கள் தாராளமாக போலீஸ்க்கு தகவல் கொடுக்கலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm