நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொய்யான வாக்குறுதிகளே எம்பிகளின் ஆதரவு மாறுவதற்கான காரணம்: பிரதமர்

ஈப்போ:

பொய்யான வாக்குறுதிகளே எம்பிகளின் ஆதரவு மாறுவதற்கான காரணம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எதிர்கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றனர்.

இதற்கு ஆட்சி மாற்றம் குறித்த தவறான வாக்குறுதிகள் தான் முக்கிய காரணமாக உள்ளது.

இதனால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மீதான நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

பின்கதவு சூழ்ச்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்  கூறப்பட்டதாகவும் ஆனால் அது நடக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர்கள் இனப்பிரச்சினைகள் உட்பட எதிர்மறையான உணர்வுகளில் விளையாடுகின்றனர் என்றார்.

ஒற்றுமை அரசு வலுவாக இருகிறது என்று நான் சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்.

இதனால் துபாயில் இருந்து லண்டனுக்கு செல்வார்கள்.

ஆனால் அவர்கள் எங்கு சென்றாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset