செய்திகள் மலேசியா
மறைந்த மைபிபிபி தலைவர் மெக்லின் நினைவாக நடத்தப்பட்ட பூப்பந்துப் போட்டிக்கு மகத்தான ஆதரவு
செமினி:
மறைந்த மைபிபிபி தலைவர் டத்தோ மெக்லின் நினைவாக நடத்தப்பட்ட பூப்பந்துப் போட்டிக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது.
உலு லங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன் இதனை தெரிவித்தார்.
மைபிபிபி கட்சி மெக்லின் டி குருஸ் தலைமையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது.
ஆனால் அவர் திடீரென மரணமடைந்து விட்டார். இருந்தாலும் அவரின் பாணியில் டத்தோ லோகபாலா கட்சியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக அதிகமான இளைஞர்கள் கட்சியில் இணைய வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த பூப்பந்துப் போட்டி நடைபெற்றது.
பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார் ஆதரவுடன் உலுலங்காட் தொகுதியுடன் இணைந்து இந்த போட்டி நடைபெற்றது.
கிட்டத்தட்ட 16 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.
இதனைத் தொடர்ந்து கால்பந்து போட்டி உட்பட பல நிகழ்வுகளை நாங்கள் நடத்தவுள்ளோம்.
குறிப்பாக மக்கள் பயன் பெறும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று சுரேந்திரன் கூறினார்.
முன்னதாக, இந்த மைபிபிபி பேட்மிண்டன் போட்டியை மைபிபிபி கட்சியின் தலைவர் டத்தோ லோகபாலா தொடக்கி வைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm