செய்திகள் உலகம்
காசா போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் தொடர்ந்து முட்டுக்கட்டை: கத்தார் குற்றச்சாட்டு
தோஹா:
அரசியல் லாபத்துக்காக காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக கத்தார் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து "எக்ஸ்' ஊடகத்தில் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பதிவிட்டிருப்பதாவது,
காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கும், ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதிகளாக இருப்பவர்கள் விடுவிக்கப்படுவதற்குமான பேச்சுவார்த்தைக்கு கத்தார் மத்தியஸ்தம் செய்து வருகிறது.
ஆனால், இந்த சமாதான முயற்சியை மோசமாக விமர்சித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருக்கும் ஒலிப் பதிவு கசிந்துள்ளது. இது, கத்தார் அரசுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இஸ்ரேல் பிணைக் கைதிகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைவிட, தனது அரசியல் லாபத்துக்கு நெதன்யாகு முக்கியத்துவம் தருவது தெரியவருகிறது என்று தனது பதிவில் மஜிஸ் அல்அன்சாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm