செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் O வகை ரத்தம் தட்டுப்பாடு: தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் O வகை ரத்த இருப்பு குறைவாக இருப்பதாகவும் நன்கொடை வழங்கும்படியும் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து O வகை ரத்தத்தைத் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
O வகை ரத்தம் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் இருப்பு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவசரமான சூழல்களில் நோயாளிகளின் ரத்த வகை தெரியாதபோது O வகை ரத்தமே பயன்படுத்தப்படுகிறது.
O வகை ரத்த இருப்பு தொடர்ந்து குறைந்தால் அறுவைச் சிகிச்சைகளையும் உயிர்காக்க ரத்தம் செலுத்தப்படுவதையும் ஒத்திவைக்க வேண்டியிருக்கலாம்.
O+, O- ரத்த வகைகொண்ட 16 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டோர் தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். குறைந்தது 45 கிலோகிராம் எடை கொண்டிருக்க வேண்டும்.
ரத்த தானத்திற்குத் தகுதி பெறுவோர் குறித்த மேல் விவரங்களுக்கு: www.hsa.gov.sg/donor_criteria
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm