செய்திகள் மலேசியா
தைப்பூச விழாவிற்கு தயாராகிய ஆலயத்தில் திடீர் வெள்ளம்: 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
ஜொகூர்பாரு:
தைப்பூச விழாவிற்கு தயாராகி கொண்டிருந்த ஆலயத்தில் திடீரென வெள்ளம் சூழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஆலயத்தில் சிக்கிக் கொண்ட 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஜொகூர் கங்கார் தெப்ராவில் ஸ்ரீ முனீஸ்வரர் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச விழா கொண்டாடப்படும்.
இந்நிலையில் ஆலய நிர்வாகத்தின் தைப்பூச விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அப்போது இடைவிடாது பெய்த மழையை தொடர்ந்து அவ்வாலயத்தில் 3 மீட்டர் உயரம் வரை தண்ணீர் சூழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர் தீயணைப்பு படையினரை தொடர்பு கொண்டனர்.
இரவு 10 மணிக்கு மேல் ஆலயத்தில் இருந்த 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று தெப்ராவ் தீயணைப்புப் படையின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் கைரூல் அஸஹார் கூறினார்.
- பார்த்தின் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2024, 3:54 pm
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வீட்டுக்காவல் மசோதா தாக்கல் செய்யப்படும்: சைஃபுடின் நசுத்தியோன்
October 19, 2024, 2:47 pm
ஜாலான் ஈப்போ ஸ்ரீ மஹா முனிஸ்வரர் ஆலயத்தின் 68-ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது
October 19, 2024, 12:10 pm
தான்ஶ்ரீ ஜி. வடிவேலு மரணம்: நம்பிக்கையின் ஆழ்ந்த இரங்கல்
October 19, 2024, 11:23 am
உறுமி மேள ஊர்வலம்: தீபாவளியை வித்தியாசமாக வரவேற்ற காப்புறுதி நிறுவனங்கள்
October 19, 2024, 11:12 am
உண்மையான இஸ்லாமிய போதனைகளில் இருந்து குளோபல் இக்வான் விலகியுள்ளது: சிலாங்கூர் ஃபத்வா
October 19, 2024, 11:05 am