நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியாவில் தாக்கப்பட்ட சிங்கப்பூர் மாணவி: சந்தேக நபர் கைது

சியோல்:

தென்கொரியாவில் கடந்த வாரம் பட்டப்பகலில் சிங்கப்பூர் மாணவி ஒருவர் தாக்கப்பட்டார்.

அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் தென்கொரிய ஆடவர் ஜனவரி 16ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆடவர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என்று அறியப்படுகிறது.

அவரது பெயரைத் தென்கொரிய காவல்துறை வெளியிடவில்லை.

ஜனவரி 12ஆம் தேதியன்று தென்கொரிய நேரப்படி மாலை 4 மணி அளவில் சிங்கப்பூர் மாணவியின் முகத்தில் அந்த ஆடவர் பலமுறை குத்தியதாக நம்பப்படுகிறது.

குமாரி இங் சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரைத் தாக்கிய ஆடவருக்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதாகவும் அவர் பிறருடன் தொடர்புகொள்ள சிரமப்படுபவர் என்றும் காவல்துறை கூறியது.

குமாரி இங்கிற்கு முகத்தில் இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset