செய்திகள் உலகம்
பறவை மோதி விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியது: விமானி உயிரிழந்தார்
பான்கெல்மோ:
சிலி நாட்டில் நடந்த பயங்கர விமான விபத்தில் விமானி தீயில் கருகி பலியானார். சிலி நாட்டின் தேசிய வனவியல் கழகத்தில் பணியாற்றி வந்த விமானி பெர்னாண்டோ சோலன்ஸ் (58) என்பவர் தலைமையிலான குழுவினர், ஐயர்ஸ் டர்போ ட்ரூஷ் என்ற தீயணைப்பு விமானத்தில் பயணம் செய்தனர்.
அந்த விமானத்தை சோதனை முறையில் இயக்கிய போது, திடீரென விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பான்கெல்மோ விமான நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில், பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு விமானம் அந்தரத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் நடுரோட்டில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் இருந்த விமானி பெர்னாண்டோ சோலன்ஸ் தீயில் கருகி உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
தீயணைப்பு விமானம் சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் சிலர் படம் பிடித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிலி நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm