நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 23 ஊழியர்கள் மரணம்

பேங்காக்: 

தாய்லாந்தின் சுபன் பூரி மாநிலத்திலுள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் திடீரென வெடி விபத்தில் 23 ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர். 

அப்போது 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

எனவே, மரண எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset