செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச ரத ஊர்வலத்தில் 3 விவகாரங்களுக்கு போலிஸ் தடை: டான்ஸ்ரீ நடராஜா
கோலாலம்பூர்:
பத்துமலை தைப்பூச ரத ஊர்வலத்தின் போது 3 விவகாரங்களுக்கு தடை விதிக்க போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இதனை உறுதிப்படுத்தினார்.
பத்துமலை தைப்பூச விழா, வெள்ளி ரத ஊர்வலம் குறித்து கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அலாவூதின் அப்துல் மஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர், டாங் வாங்கி போலீஸ் தலைவர் உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

தைப்பூச வெள்ளி ரத ஊர்வலத்தின் போது பக்தர்களுக்கு ஒரு சில தடைகளை போலீஸ் விதித்துள்ளது.
ரத ஊர்வலத்தின் போது பட்டாசு, வாண வேடிக்கை வெடிக்க வேண்டாம். மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பரித்து சத்தமிட்டு முருக்கி செல்லக் கூடாது.
குறிப்பாக மது அருந்துவது, விற்பது போன்ற நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆகவே பக்தர்கள் இந்த விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவக்குமாரும் கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 1, 2026, 8:46 pm
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன்: கோபிந்த் சிங்
February 1, 2026, 8:45 pm
பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா
February 1, 2026, 8:44 pm
டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்
February 1, 2026, 10:49 am
பத்துமலையில் தைப்பூச உற்சவம்: பக்திப் பரவசத்தில் பக்தர்கள்
January 31, 2026, 8:53 pm
இடியுடன் கூடிய கனமழை: ஆறு மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை
January 31, 2026, 6:42 pm
பெண்ணின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வெளிநாட்டவர் கைது
January 31, 2026, 5:59 pm
கூர்மையான ஞானவேல் கொண்டு நவீன உலகின் சவால்களை வெல்வோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 31, 2026, 5:14 pm
சாலையின் இரட்டை கோட்டில் ஆபத்தான ஓட்டம்: வைரலான ‘பிங்க் பஸ்’ குறித்து JPJ விசாரணை
January 31, 2026, 4:25 pm
