செய்திகள் மலேசியா
காதல் ஜோடிக்கு இடையே வாக்குவாதம்; பினாங்கு பாலத்திலிருந்து குதித்தனர்
ஜோர்ஜ்டவுன்:
காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணம் இருவரும் பினாங்கு பாலத்திலிருந்து குதித்தனர். நல்வாய்ப்பாக இருவரும் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டதாக மலாய் நாளேடான உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு 7 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் திடீரென்று இருவரும் பாலத்திலிருந்து குதித்துள்ளனர்.
பிறை தீயணைப்பு துறைக்கு அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்தனர்.
அங்கிருந்த ஓர் ஆடவர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடியைக் காப்பாற்ற பாலத்திலிருந்து குதித்துள்ளார். இருவரையும் மீனவ படகில் ஏற்றப்பட்டனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகாக சம்பந்தப்பட்ட காதல் ஜோடியைப் பொது மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm