நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீரின் கருத்து; நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச்செல்லும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து 

கோலாலம்பூர்: 

இந்திய சமூகம் மலேசியாவிற்கு விசுவாசமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருப்பது தொடர்பில் துன் மகாதீரை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடியுள்ளார். 

நாட்டு மக்கள் குறிப்பாக இளையோர்கள் இதுபோன்ற கருத்துக்களை எல்லாம் புறக்கணிக்க வேண்டும். இவையாவும் இன ஒற்றுமைக்கு தடைகல்லாக அமைந்துள்ளதாக அன்வார் சொன்னார். 

ஒரு முதிர்ச்சியற்ற சிந்தனையை மூத்த அரசியல்வாதி ஒருவர் கொண்டுள்ளார். இது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்று செய்தியாளர்களிடம் அன்வார் குறிப்பிட்டார். 

மலேசிய இந்தியர்கள் மலேசியாவிற்கு விசுவாசமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மது பேசியுள்ளார். 

இந்த கருத்து இந்திய தலைவர்களையும் சமூகத்தையும் பெருவாரியாக பாதித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset