நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை ஐயப்பன் ஆலய தேவஸ்தானத்திற்கு அமைச்சர் கோபிந்த் சிங் மானியம் வழங்கினார்

பத்துமலை:

பத்துமலை சுவாமி ஐயப்பன் ஆலய  தேவஸ்தானத்திற்கு 20,000 ரிங்கிட் மானியம் வழங்குவதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.

மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்றிரவு பத்துமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த தரிசனத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு 20 ஆயிரம் வெள்ளியை வழங்குவதாக அவர் பலத்த கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார்.

டாமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஸ் சிங், மண்டிப் சிங், உலு சிலாங்கூர் பிரான்ஸ், முரளி உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset