நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீரின் சர்ச்சைக்குரிய கருத்து; தேசிய கூட்டணியைப் பாதிக்காது: ஶ்ரீ சஞ்ஜீவன் கருத்து 

பெட்டாலிங் ஜெயா: 

மலேசியாவிலுள்ள இந்தியர்கள் மலேசியா நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியுள்ளார். 

துன் மகாதீரின் கருத்து தேசிய கூட்டணியின் கருத்து அல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்தாகும் என்று பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஶ்ரீ சஞ்ஜீவன் தெரிவித்தார். 

என்னதான் துன் டாக்டர் மகாதீர் தேசிய கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் அவரின் கருத்து எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். 

கடந்த 15ஆவது மாநில சட்டமன்ற தேர்தலில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவு 20 விழுக்காடு அதிகரித்துள்ளதை ஶ்ரீ சஞ்ஜீவன் சுட்டிக்காட்டினார். 

துன் டாக்டர் மகாதீர் முஹம்மது தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், இந்திய சமூகம் மலேசியாவிற்கு விசுவாசமாக இல்லை என்று துன் டாக்டர் மகாதீர் நேர்காணலில் இவ்வாறு கூறினார். 

இந்த கருத்து மலேசிய இந்தியர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset