செய்திகள் மலேசியா
துன் மகாதீருக்கு எதிராக 50க்கும் மேற்பபட்ட புகார்கள்: கெஅடிலான் திட்டம்
கோலாலம்பூர்:
துன் மகாதீருக்கு எதிராக நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட புகார்களை செய்ய கெஅடிலான் கட்சி திட்டமிட்டுள்ளது.
கெஅடிலான் கட்சியின் தொகுதி தலைவர் தீபன் சுப்பிரமணியம் இதனை தெரிவித்தார்.
இந்தியர்கள் மலேசியாவுக்கு முழுமையாக விசுவாசமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
துன் மகாதீரின் இந்த குற்றச்சாட்டு வெறுப்பு நிறைந்த வெறித்தனமானது. இதன் அடிப்படையில் இன்று அவர் மீது 15 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளது.
பினாங்கு, சுங்கை பூலோ, கிள்ளான், கோல லங்காட்டில் இந்த போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த போலீஸ் புகார்கள் நாளையும் தொடரும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm