செய்திகள் மலேசியா
விசுவாசம் இல்லாத மகாதீர் இந்தியர்களை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
விசுவாசம் இல்லாத துன் மகாதீர் இந்தியர்களை பற்றி பேசுவது
வேடிக்கையாக உள்ளது என்று இகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா மஇகாவின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் மஇகா தலைமையகத்தில் இவ்விழா கொண்டாடுவது வழக்கம்.
இன்னமும் ஓரிரு ஆண்டுகளில் மஇகாவின் புதிய தலைமையகத்தில் இவ்விழா கொண்டாடப்படும் என்று அவர் கூறினார்.
இதனிடையே இந்திய சமுதாயத்தின் விசுவாசம் குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. விசுவாசம் பற்றி பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.
துன் மகாதீருக்கு விசுவாசம் என்றால் என்னவென்று தெரியாது. அதனால் அவர் விசுவாசம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
அதே வேளையில் துன் மகாதீர் மீது நடவடிக்கை எடுப்பது எல்லாம் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm