நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1எம்.டி.பி தொடர்பான ஆவணப்படத்தை நெட்ஃபிலிக்ஸ் தளத்திலிருந்து நீக்குக: அரசாங்கத்திற்கு நஜீப் ரசாக் கோரிக்கை 

கோலாலம்பூர்: 

NETFLIX OTT தளத்தில் MAN ON THE RUN எனும் ஆவணப்படம் ஒளியேறி வருகிறது. இந்த ஆவணப்படமானது 1எம்.டி.பி வழக்கு தொடர்புடையதாகும். இதனை அரசாங்கம் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார். 

சம்பந்தப்பட்ட ஆவணப்படம் என்பது நடப்பில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 1எம்.டி.பி வழக்கு விசாரணைக்கு இடையூறாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அந்த ஆவணப்படத்தில் உள்ள நேர்காணலில் சரவாக் ரிப்போர்ட் நிறுவனர் கிளேர் ரியூகாஸ்டல், முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ தோமி தாமஸ் ஆகியோர் கலந்துரையாடியுள்ளர். இது தொடர்பாக இருவருக்கும் எதிராக சம்மன் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் முஹம்மத் ஷாஃபி அப்துல்லா கூறினார். 

இந்த ஆவணப்படம் 1எம்.டி.பி வழக்கு விசாரணையை அவமதிப்பதாக உள்ளது என்று நஜிப்பின் புகார் மனுவை நீதிபதி கோலின்ஸ் செக்குவேராவிடம் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset