நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜைன் ரய்யான் கொலை வழக்கில் புதிய முன்னேற்றம் இல்லை: அய்யுப் கான் மைதீன் கருத்து 

கோலாலம்பூர்: 

அட்டிஸம் குறைபாடு உள்ள சிறுவனான ஜைன் ரய்யான் கொலை விசாரணையில் புதிய மேம்பாடுகள் எதுவும் இல்லை என்று அரச மலேசிய காவல்படையின் துணைத்தலைவர் அய்யுப் கான் மைதீன் பிச்சை கூறினார். 

இருப்பினும், ஜைன் ரய்யான் கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

காவல்துறை இந்த கொலை தொடர்பான விசாரணைகளை நிறுத்தவில்லை என்று அவர் திட்டவட்டமாக சொன்னார்.  ஒருவேளை புதிய முன்னேற்றங்கள் எதாவது இருந்தால் கண்டிப்பாக தகவல் பகிரப்படும் என்று புக்கிட் அமானில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அய்யுப் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த மாதம் ஜைன் ரய்யான் காணாமல் போனதாக தகவல் கிடைக்கப்பட்டு பிறகு மறுநாள் சடலமாக மீட்கபட்டான். காவல்துறை இந்த சம்பவத்தை கொலை சம்பவமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset