நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியிலிருந்து வெளியேறியது அர்செனல்

லண்டன்:

எஃப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் இருந்து அர்செனல் அணியினர் வெளியேறியுள்ளனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற 3ஆவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியிடம் தோல்வி கண்டனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை ஜேகப் கிவோயர், லூயிஸ் டியாஸ் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து லிவர்பூல் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

அர்செனல் அணியினர் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset