செய்திகள் மலேசியா
அதிகமான எம்பிகள் பிரதமரை ஆதரிப்பதால் தேசியக் கூட்டணியும் சனுசியும் கவலைப்படுகின்றார் பாவம்: மாஃபூஸ் ஒமர்
கோலாலம்பூர்:
அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதால் தேசியக் கூட்டணியின் தலைவர்களும் கெடா மந்திரி பெசாரும் முஹம்மது சனுசி கவலைப்படுகின்றனர் பாவம்.
கெடா மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் மாஃபூஸ் ஓமர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் விரைவில் கவிழ்ந்து விடும் என்று கூறுவது நம்பிக்கை கூட்டணி தனது அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிப்பதைத் தடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாகும்.
புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்கட்சி எம்.பி.க்கள், அன்வாரை ஆதரிப்பதாக அறிவிப்பதற்கு முன், அடுத்த மாதம் மக்களவை அதன் கூட்டத்தை மீண்டும் தொடங்கும் வரை காத்திருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சனுசியின் கூற்றுக்கள், அன்வாருக்கு ஆதரவான இத்தகைய அறிவிப்புகள், பல நீதிமன்ற வழக்குகள் குறித்த கவலைகள் குறித்து தேசிய கூட்டணியின் தலைமையின் கவலையை சுட்டிக் காட்டுவதாக அவர் கூறினார்.
சனுசியின் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும்.
ஏனெனில், நாட்டில் அரசியல் நிலைத் தன்மை இல்லை என்று அவர்கள் உணரக்கூடும்.
இருப்பினும், மக்களவையில் பிரதமருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் நிலைமை மிகவும் நிலையானது என்று மாஃபூஸ் ஓமர்
கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்; பிரதமர்
May 4, 2024, 1:51 pm
தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி: 800 போட்டியாளர்கள் பங்கேற்பர்
May 4, 2024, 1:50 pm
இந்திய, சீன வாக்காளர்களின் ஆதரவு குறித்து தெளிவான அறிகுறி இல்லை: கைரூல் அஸ்ஹாரி
May 4, 2024, 12:54 pm
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
May 4, 2024, 12:19 pm
25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது
May 4, 2024, 12:16 pm