நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: செல்சி வெற்றி

லண்டன்:

எஃப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் செல்சி உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.

ஸ்டேம்போர்ட் பிரிட்ஸ் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று  ஆட்டத்தில் செல்சி அணியினர் பிரிஸ்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் பிரிஸ்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியின் வெற்றி கோல்களை அன்மாண்டோ புரோஜா, தியாகோ சில்வா, ரஹிம் ஸ்டெர்லிங், என்சோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடித்தனர்.

ரிவர்சைட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மிடல்ஸ்புரோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்வான்சா, பிரிக்டோன், வாட்போர்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset