நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஹரிமாவ் மலாயா கால்பந்து அணிக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து 

கோலாலம்பூர்:

2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கால்பந்து போட்டியில் பங்கெடுத்திருக்கும் ஹரிமாவ் மலாயா அணிக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். 

இந்த முறை நடைபெறும் ஆசிய கிண்ண போட்டியில் ஹரிமாவ் மலாயா அணி சிறந்தவற்றை வழங்குவார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் அன்வார் தமது சமூக ஊடகங்களில் காணொலியை வெளியிட்டு பேசினார். 

கிம் பான் கோ தலைமையிலான ஹரிமாவ் மலாயா அணி 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்றது. 

கத்தார் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் ஹரிமாவ் மலாயா அணி முதல் ஆட்டத்தில் ஜோர்டன் அணியைச் சந்திக்கிறது. 

42 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா ஆசிய கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள மலேசிய கால்பந்து வரலாற்றில் பெரும் பெருமைக்குரிய தருணமாகும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset