நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரியங்கா காந்தி மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு

புது டெல்லி:

ஹரியாணா மாநிலத்தின் நில பேர ஊழல் செய்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் குற்றபத்திரிகையில் அவருடைய கணவர் ராபர்ட் வதேராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெளிநாடு வாழ் தொழிலதிபரான சி.சி.தம்பியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் தம்பி, ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரிட்டனுக்கு தப்பியோடிய சர்ச்சைக்குரிய இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியின் உறவினர் எனவும் அமலாக்கத் துறை  குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை வதேரா மறுத்து வருகிறார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset