நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராணுவ சித்திரவதையில் பொதுமக்கள் பலி: தவிர்க்க ராணுவத்தினருக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

ஜம்மு:

குடிமக்களை காயப்படுத்தும் தவறுகளை தவிர்க்க வேண்டும் என்று ராணுவத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 21ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விசாரணைக்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,  ராணுவ வீரர்களிடம் பேசுகையில்,  ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இதில் ராணுவ வீரர்கள் வெற்றிபெறுவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ராணுவத்தினர் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். குடிமக்களை காயப்படுத்தும் தவறுகளை ராணுவத்தினர் தவிர்க்க வேண்டும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset