![image](https://imgs.nambikkai.com.my/BJP-Mlas.jpg)
செய்திகள் இந்தியா
தேசிய கீதம் அவமதிப்பு: 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்கு
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவை வளாகத்தில் தேசிய கீதம் பாடப்பட்டபோது பாஜகவின் 11 எம்எல்ஏக்கள் அவமதித்ததாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சிலைக்கு கீழே முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேற்கு வங்க மாவிலத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துவதாகக் குற்றம்சாட்டி அதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேசிய கீதம் பாடினர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பாஜக எம்எல்ஏக்கள் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகவும் மணி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
தேசிய கீதம் பாடப்பட்டபோது அதற்கு அவமரியாதை செய்ததாக 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது கொல்கத்தாவின் ஹரே தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm