நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரதர்.....இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது: இயக்குநர் பி.சமுத்திரகனி அறிக்கை 

சென்னை: 

பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், ஞானவேல் ராஜா அறிக்கைக்கு இயக்குநர் சமுத்திரகனி பதிலடி கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முறையாக சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 

மேலும், மன்னிப்பு அறிக்கைகள் எல்லாம் வெளியிட வேண்டிய அவசியமில்லை. பொதுவெளியில் தாமாக முன்வந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியிருக்கிறார். 

முன்னதாக, பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குநர் அமீருக்கு எதிராக பல அடுக்க்கடுக்கான குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முன் வைத்தார். 

இயக்குநர் அமீருக்கு இயக்குநர்கள் சசிக்குமார், பாரதிராஜா, கரு.பழனியப்பன், சேரன், சமுத்திரகனி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset