நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியீடு 

சென்னை: 

பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த STUDIO GREEN தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஞானவேல் ராஜா  தற்போது மன்னிப்பு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தாம் பயன்படுத்திய சில வார்த்தைகள் இயக்குநர் அமீரின் மனதைப் புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் இயக்குநர் அமீர் தமக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளைச் சொல்லி என் மனதைப் புண்படுத்தி விட்டதாக ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். 

முன்னதாக, 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக படத்தின் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவரும் வார்த்தை போர் புரிந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழலில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், சினேகன், ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset