நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நிர்க்கதியற்று தவிக்கும் காசா மருத்துவமனை: மொத்தமாக புதைக்கப்பட்ட 179 சடலங்கள்

காசா:

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள் உட்டபட 179 பாலஸ்தீனியர்களின் உடல்கள் அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கவோ அல்லது அணுகவோ இஸ்ரேல் இராணுவம் தடுத்த நிலையில் சடலங்கள் சிதைந்து, தெருநாய்களால் சிதைக்கப்பட்டன.

இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் பலியானவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள்,  மருத்துவமனை தொண்டர்கள் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் பெரிய  குழியை வெட்டி இந்த சடலங்களை புதைத்ததாக அந்த பத்திரிகையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை காசா நகரில் உள்ள அல்-ஹிலு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றி வளைத்துள்ளன.

- செய்திப் பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset