செய்திகள் உலகம்
நிர்க்கதியற்று தவிக்கும் காசா மருத்துவமனை: மொத்தமாக புதைக்கப்பட்ட 179 சடலங்கள்
காசா:
காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள் உட்டபட 179 பாலஸ்தீனியர்களின் உடல்கள் அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கவோ அல்லது அணுகவோ இஸ்ரேல் இராணுவம் தடுத்த நிலையில் சடலங்கள் சிதைந்து, தெருநாய்களால் சிதைக்கப்பட்டன.
இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் பலியானவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.
பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை தொண்டர்கள் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் பெரிய குழியை வெட்டி இந்த சடலங்களை புதைத்ததாக அந்த பத்திரிகையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை காசா நகரில் உள்ள அல்-ஹிலு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றி வளைத்துள்ளன.
- செய்திப் பிரிவு
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm