நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

லியோ திரைப்படத்திற்கு 4 மணி காட்சிக்கு அனுமதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 

லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் லியோ படம் அதிகாலையில் திரையிடப்படும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது 

இருந்தும், உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் காலை 4 மணி காட்சிக்கு பதிலாக காலை 7 மணிக்கு காட்சிக்கு அனுமதி அளிக்க கோரி தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது. 

காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகளைத் தொடங்கினால் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset