செய்திகள் இந்தியா
27 ஆண்டுகளாக நிலுவை - மகளிர் இடஒதுக்கீடு: மசோதா எப்போது பலன் கிடைக்கும்?
புது டெல்லி:
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 128ஆவது திருத்த இந்த மசோதா வழிவகுக்கிறது.
27 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் உள்ளது. இந்த மசோதா எப்போது நிறைவேறும், அப்படியே நிறைவேறினால் உடனடியாக பெண்களுக்கு பதவி கிடைக்குமா என்றால் இல்லை. இதற்கு பல்வேறு தடைகற்கள் உள்ளன.
முதலில், மகளிர் இடஒதுக்கீடு சாத்தியமாவதற்கு முன்பு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
பின்னர் 50 சதவீத சட்டப் பேரவைகளின் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மசோதா சட்டமான பிறகு நடத்தப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமலாகும்.
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
2026ம் ஆண்டுக்கு பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2031இல்தான் இது அமலுக்கு வரும் என்று சட்டநிபுணர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னர் 15 ஆண்டுகள் இந்த இடஒதுக்கீடு அமலில் இருக்கும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm