
செய்திகள் மலேசியா
பிஎஸ்எம் கட்சியின் அருட்செல்வம் உட்பட மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர் :
பிஎஸ்எம் கட்சியின் அருட்செல்வம் உட்பட மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர்
நாடாளுமன்றத்தில் மகஜர் வழங்கும் நோக்கில் அவர்கள் சென்றனர். இச்சம்பவம் தொடர்பில் மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம், பொருளாளர் சோ சோக் ஹுவா, இளைஞர் பிரிவைச் சேர்ந்த அய்மான் ஹரிஸ் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மதியம் 2 மணிக்கு அம்முவரும் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு சென்றனர்.
அவர்களிடம் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேல் விசாரணைகள் பதிவு செய்யப்பட்டது என்று அவர்களின் வழக்கறிஞர் கோகிலா கூறினார்.
இதனிடையே இந்த விசாரணையின் போது தம்மிடம் 22 கேள்விகள் கேட்கப்பட்டது என்று அருட்செல்வம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்