செய்திகள் இந்தியா
100 மணி நேரத்துக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் என்கவுன்ட்டர்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் 100 மணி நேரத்துக்கும் மேல் என்கவுன்ட்டர் செய்து சண்டையிட்டு வருகின்றனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த புதன்கிழமை மேற்கொண்ட தீவிர தேடுதல் பணியின்போது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
வனப் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து 100 மணி நேரத்துக்கு மேல் சண்டையிட்டு வருகின்றனர்.
எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கவுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் இணைந்து கூட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் பயங்கரவாதிகளை தற்காக்கும் வகையில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
