
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நடிகை விஜயலட்சுமி விவகாரம்; சீமானுக்கு எதிராக பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்
சென்னை:
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமானுக்கு எதிராக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயவுள்ளதாக சொல்லப்படுகிறது.
சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணி நேரம் விசாரணைகள் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று விசாரணைக்காக சீமான் ஆஜராக இருக்கிறார். இதனால் சீமானுக்கு எதிராக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைக்கு ஆஜராகவுள்ள சீமான் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm
தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
May 1, 2025, 7:39 pm