செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: மருத்துவக் கல்லூரிகளில் பாடம் நடத்துவதை நிறுத்திய மருத்துவர்கள்
சென்னை:
தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள அரசு மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை நிறுத்தியுள்ளனர்.
‘முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து, அரசு மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம், 20 ஆண்டுகள் கடந்த மூத்த முதுநிலை மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3,000 வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்களை உருவாக்குவது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இதற்காக, பல்வேறு சங்கங்கள் ஒருங்கிணைந்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கி, சுகாதாரத் துறை அமைச்சர், செயலருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 20 ஆயிரம் மருத்துவர்கள் கடந்த 12-ம் தேதி முதல் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றினர்.
அடுத்த கட்டமாக 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை அரசு மருத்துவர்கள் தற்போது நிறுத்தியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 1, 2026, 3:43 pm
மாம்பழம் யாருக்கு? மகன் தந்தை சண்டைக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
January 31, 2026, 10:02 pm
நான் ஷாருக்கானின் தீவிர விசிறி; என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதில் நான் உறுதியாக இருப்பேன்: விஜய்
January 30, 2026, 3:55 pm
ரூபாய் மதிப்பு குறைந்தால் இயல்பாகவே தங்கத்தின் விலை அதிகரிக்கும்: முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்
January 28, 2026, 11:59 am
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் காஜா முயீனுத்தீன் வலியுறுத்தல்
January 28, 2026, 9:10 am
“திருச்சியை 2-ஆவது தலைநகராக அறிவிக்க வேண்டும்”: கனிமொழியிடம் அமைச்சர்கள் மனு
January 23, 2026, 10:53 pm
மோடி மேடையில் ‘மாம்பழம்’ சின்னமா?: ராமதாஸ் கோபம்
January 22, 2026, 6:43 pm
