நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு மூளையாக செயல்பட்ட சாதனை தமிழன் வீர முத்துவேல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மகுடம் சூடிய அப்துல் கலாம், சிவதாணு பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா ஆகிய தமிழர்களின் வரிசையில் தற்போது, அறிவியல் வல்லுநர் வீரமுத்துவேல் தடம் பதித்துள்ளார்.

சந்திரயான் -1 மற்றும் 2  திட்டங்களை தொடர்ந்து சந்திரயான் – 3 திட்டத்திலும் வீர முத்துவேல் முத்திரை பதித்துள்ளார். 

சந்திரயான்-2 வின் தோல்வியால் பல பாடங்களை கற்றுக் கொண்ட பிறகு வெற்றிகரமான இஸ்ரோ இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது . சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராகத் தமிழர்கள்தான் தொடர்ந்து மூன்று முறையாக இருந்து வருகின்றனர்.

சந்திரயான் 1,2 ஆகிய விண்கலத் திட்டங்களில் தமிழர்கள்தான் திட்ட இயக்குநராக செயல்பட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, சந்திரயான் 3 திட்ட இயக்குநராகவும் தமிழரே முக்கியப் பங்காற்றியுள்ளார். 

விஞ்ஞானி வீர முத்துவேல் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். வீர முத்துவேல் 29 துணை இயக்குநர்களுடனும், விஞ்ஞானிகளுடனும் பொறியாளர்களுடனும் இணைந்து பணியாற்றி சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.

விண்வெளி மீது வீர முத்துவேல் கொண்ட தீராப் பற்றுதான் இவரைத் தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பைப் படிக்க வைத்தது. சென்னை ஐஐடியில் மேற்கொண்ட படிப்பைப் படித்து முடித்த வீரமுத்துவேல், அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து வந்தார். 

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் 1989-ஆம் ஆண்டு விஞ்ஞானியாகச் சேர்வதற்கு வீர முத்துவேலுக்குச் சூழல் அமைந்தது. இவரின் திறமையால் இவருக்கு வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பல நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்தாலும் அவர் இஸ்ரோவில் இஸ்ரோவிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்பினார்

விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக் கட்டுரையை 2016-ஆம் ஆண்டில் சமர்பித்தார்.

அதற்கான சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வில் வீர முத்துவேல் கையாண்ட தொழில்நுட்பம் விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கும், விண்கலத்தின் ரோவர் பகுதியைச் சரியாக இயக்குவதற்கும் உதவும் வகையில் இருந்தது. 

வீர முத்துவேல் 30 ஆண்டு காலமாக இஸ்ரோவில் பல்வேறு பதவிகளிலும், திட்டங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராகப் பணியமர்த்தப்படுகிறார். வீர முத்துவேல் மேற்கொண்ட ஆய்வுதான் இந்தப் பதவிக்கு முக்கிய காரணம்.

இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த பயணமும் திட்டமிட்ட நேரப்படி கச்சிதமாக நடந்து வெற்றி பெற்றிருப்பது பெருமிதமாகவுள்ளது. நிலவின் தென் துருவத்தின் அருகில் லேண்டரைக் கொண்டு சென்று நிலவைத் தொட்ட முதல் நாடு, நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தியா என வீரமுத்துவேல் பெருமிதமாகத் தெரிவித்துள்ளார். அவருடைய தந்தை பழனிவேல், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து அந்த வெற்றி நொடிகளை நேரலையில் கண்டுகளித்து ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சில் திளைத்த விடோயோ பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset